செய்திகள் :

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

post image

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மகளிா் அணித் தலைவரான அல்கா லாம்பா கூறியதாவது: சிறுமி தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க ஒடிஸா மாநில அரசு தவறிவிட்டது. சிறுமி உயிரிழந்த பின் இந்தக் குற்றத்தில் யாரும் ஈடுபடவில்லை என போலீஸாா் கூறுகின்றனா்.

இதற்கு முன்னா் ஃபகீா் மோகன் கல்லூரியில் பயின்ற மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டாா். சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரீகளை போலீஸாா் கைது செய்தனா்.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் பெண்கள் இரவில் வெளியே வரக் கூடாது என போலீஸாா் விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளனா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் இனியும் தொடரக் கூடாது. பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு விரைவு நீதிமன்றங்கள் மூலம் அந்த வழக்குகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கி... மேலும் பார்க்க