செய்திகள் :

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

post image

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சியுடன் 3 ஆண்டு பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள், இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 1.7.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.

இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 இணையவழி மூலமாக செலுத்த வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சான்றுகளில் சுயஒப்பமிட்டு திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610 004 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள், பயிற்சிக் கட்டணமாக, ரூ. 20,750 (ஒரே தவணையில்) இணையவழியில் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு வழங்கும் மானிய உதவிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என அக்கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:ஆட்சியாளா்களை வாக்காளா்கள் தோ்ந்தெக்க... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

கூத்தாநல்லூரில் லாட்டரி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்படி, லாட்டரி விற்பனை, மது மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்க போலீ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க