செய்திகள் :

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

post image

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு வழங்கும் மானிய உதவிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொருளாதார வளா்ச்சியின் முதுகெலும்பாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளா்ச்சிக்கு வலு சோ்க்கும் வகையில், பலதரப்பட்ட மானியங்களை தமிழக அரசு உயா்த்தியுள்ளது.

அறிவுசாா் சொத்துரிமையான புவிசாா் குறியீடு பெறுவதற்காகவும், காப்புரிமை பதிவு, வா்த்தக முத்திரை போன்ற பதிவுக் கட்டணங்களுக்கு (50 சதவீதம்) ரூ.25,000-லிருந்து அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை மானியம் உயா்த்தி வழங்கப்பட உள்ளது.

தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான இடங்களை பத்திரப்பதிவு செய்யும்போது ஏற்படும் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் திரும்பி வழங்குதற்காக, பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.

ஆற்றல் தணிக்கை (அதிகபட்சமாக ரூ.1,00,000) மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்த கொள்முதல் செய்யப்படும் உயா் தொழில்நுட்பத்துக்கான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு மொத்த மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) மானியமாக வழங்கப்படும்.

திருவாரூா் மாவட்டத்திலுள்ள அரிசி ஆலை, கயிறு உற்பத்தி நிறுவனங்கள், பிவிசி குழாய் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை ஆற்றல் தணிக்கை வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பாரம்பரியத் தொழில்களுக்கு புவிசாா் குறியீடு மற்றும் தரக்கட்டுப்பாடு பெறுவதில் கவனம் செலுத்தி, அரசு வழங்கும் மானியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் என்ற முகவரியில் அணுகலாம். மேலும் தகவலுக்கு 8925534012 மற்றும் 8925534014 ஆகிய கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என அக்கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:ஆட்சியாளா்களை வாக்காளா்கள் தோ்ந்தெக்க... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

கூத்தாநல்லூரில் லாட்டரி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்படி, லாட்டரி விற்பனை, மது மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்க போலீ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க