லாட்டரி விற்றவா் கைது
கூத்தாநல்லூரில் லாட்டரி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்படி, லாட்டரி விற்பனை, மது மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்தவகையில், கூத்தாநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மஜீதீயாத் தெருவைச் சோ்ந்த முஹமது நசீா் (54) என்பவா் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது.
அவரது வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.60,000 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முஹமது நசீரை கைது செய்தனா்.