செய்திகள் :

``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' என்று கூறி வருகிறார்.

இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு.

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் கூட, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். ஆனால், தற்போது, மீண்டும் ட்ரம்ப் 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

நேற்று

நேற்று, ட்ரம்ப் ஒரு ரேடியோ நேர்காணலில், 'நான் ஐந்து போர்களை நிறுத்தியிர்க்கிறேன். அதில் 31 ஆண்டுகளாக காங்கோ மற்றும் ரூவாண்டா இடையே நடந்து கொண்டிருந்த போரும் ஒன்று. அந்தப் போரில் அதுவரை 7 லட்சம் மக்கள் இறந்திருந்தினர்.

ஆனால், அந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அதை நான் நிறுத்தி வைத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஐந்து போர்களில் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலும் ஒன்று.

நேற்று முன்தினம்...

நேற்று முன் தினமும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

நோபல் பரிசு!

கடந்த வாரம், வெள்ளை மாளிகையில் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "ட்ரம்ப் தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தில், மாதத்திற்கு ஒன்று என போர் நிறுத்தத்தையும், அமைதிக்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதனால், அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ஆக, ட்ரம்ப் திரும்ப திரும்ப இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் பற்றி கூறிவருவதற்கு நோபல் பரிசும் ஒரு காரணம்.

OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர... மேலும் பார்க்க

ட்ரம்ப் மிரட்டல்; ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் நிலைமை என்ன ஆகும்?

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், 25 சதவிகித வரி பிளஸ் அபராதத்தை இந்தியா மீது விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல... சீனா, பிரேசில் ஆகிய நாட... மேலும் பார்க்க

Shibu Soren: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஷிபு சோரன் (81) சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவ... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் 'முட்டா பயலே' என சொல்லி ம... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவை உறுதி செய்யும் ஹெச்பிஏ1சி (HbA1c) டெஸ்ட்; உண்மையிலேயே அவசியம்தானா?

Doctor Vikatan: ஒருவருக்கு சர்க்கரைநோய்இருப்பதைக் கண்டுபிடிக்க, சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்யப்படுகிறரத்தப் பரிசோதனைகள் போதுமானவையாக இருக்காதா.... பிறகு ஏன், ஹெச்பிஏ1சி எனப்படும் மூ... மேலும் பார்க்க

OPS: ``கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும்'' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொர... மேலும் பார்க்க