செய்திகள் :

Doctor Vikatan: நீரிழிவை உறுதி செய்யும் ஹெச்பிஏ1சி (HbA1c) டெஸ்ட்; உண்மையிலேயே அவசியம்தானா?

post image

Doctor Vikatan: ஒருவருக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடிக்க, சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்யப்படுகிற ரத்தப் பரிசோதனைகள் போதுமானவையாக இருக்காதா.... பிறகு ஏன், ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளும் HbA1c டெஸ்ட்டை எடுக்கச் சொல்கிறீர்கள்... ஹெச்பிஏ1சி டெஸ்ட் என்பது அவ்வளவு முக்கியமானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதில் மிக முக்கியமான டெஸ்ட் ஹெச்பிஏ1சி ( HbA1c ) என்பது. நம் ரத்தத்தில் சர்க்கரையானது எந்த அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட் இது. அதாவது ஹீமோகுளோபினில் சர்க்கரை எவ்வளவு படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட். இப்படி சர்க்கரை படிவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகும். அதனால்தான் இதை 3 மாதங்களுக்கொரு முறை செய்து பார்க்கிறோம்.

ஹெச்பிஏ1சி அளவானது 5.6 என்ற அளவில் இருப்பதுதான் நார்மல். 6.5-க்கு மேல் போனால் நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படும். 40 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்து நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், அவர்கள், ஹெச்பிஏ1சி அளவை 6.5 என்ற அளவிலேயே கட்டுப்பாடாக வைத்துக்கொண்டால், பின்னாளில் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். அதுவே 60 வயதுக்கு மேலானவர்கள், இதய பாதிப்பும் இருக்கிறது என்றால், ஹெச்பிஏ1சி அளவை 7-க்கு மேல் போகாமல் வைத்துக்கொள்ளலாம். 70 ப்ளஸ் வயதினர் என்றால், அவர்களுக்கு வாழ்நாளை விட, வாழும் நாள்களின் தரமே முக்கியம் என்பதால், 7.5 என்ற அளவில்  வைத்துக்கொண்டாலே போதுமானது. எனவே, ஹெச்பிஏ1சி (HbA1c) டெஸ்ட்டானது சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமன்றி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிக முக்கியமானது.

ஹெச்பிஏ1சி அளவானது 5.6 என்ற அளவில் இருப்பதுதான் நார்மல்.

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் பாதித்து சிலர், எமர்ஜென்சியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுவதுண்டு. அந்நிலையில அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமிருப்பது தெரியவரலாம். அவர்களுக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, மருத்துவமனையில் அட்மிட் ஆனநிலையில் அது அதிகரித்திருக்கிறதா அல்லது ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக்  காரணமாக எகிறியிருக்கிறதா என்பதை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் தெரிந்துகொள்ளலாம். 

அதாவது, ஹெச்பிஏ1சியில் அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, கண்டுபிடிக்காமல் விட்டிருக்கிறார் என தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் நார்மலாக இருந்தால், தற்போதைய மருத்துவநிலை, அதன் ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகரித்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஹெச்பிஏ1சி என்பது 24 மணி நேரமும் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதைக் கண்காணிக்கும். சிலர், மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேதிக்கு ஒரு வாரம், பத்து நாள்கள் முன்பிலிருந்து உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கட்டுப்பாடாக இருப்பார்கள். அந்நிலையில் அவர்களுடைய ஃபாஸ்டிங், பிபி டெஸ்ட்டுகளை மட்டும் நம்பாமல், ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யும்போது அவர்களது உண்மையான நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும். 

சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும்.

சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும். அன்றைய தினம் அவர்கள் இனிப்பு சாப்பிட்டிருக்கலாம் அல்லது திடீரென ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமாக  சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். எனவே, ஹெச்பிஏ1சி அளவை வைத்து எது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

OPS: ``கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும்'' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொர... மேலும் பார்க்க

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' - விளக்கும் நிபுணர்

'நினைவில் கொள்ளுங்கள்... இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது...' என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது இந்தியாவில... மேலும் பார்க்க

``காங்கிரஸ் தான் தீவிரவாதத்திற்கு காரணம்; அப்சல் குருவை ஏன் தூக்கிலிடவில்லை?'' - அமித்ஷா கேள்வி

நேற்று மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,பாகிஸ்தானை இந்தியா எப்படி வழிக்கு கொண்டு வந்தது? "நாம் ப... மேலும் பார்க்க

US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?

நேற்று இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த வரி குறித்து இந்தியா என்ன சொல்கிறது? இந்த வரி குற... மேலும் பார்க்க

`சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு' -மனம் திறந்த ராகுல், காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? | In Depth

கடந்த 26-ம் தேதி தெலங்கானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ``என் 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள... மேலும் பார்க்க