செய்திகள் :

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

post image

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதே தனக்குத் தெரியாது என்றார் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மேலும் அவர் கேட்டுக்கொண்டால் பிரதமரிடம் நேரம் வாங்கித் தருவதாகக் கூறினார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்தச் சூழலில், "நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வேண்டும். நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயன்றேன். ஆனால் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.

நயினார் நாகேந்திரனிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ``ஓ.பி.எஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. அந்தக் கடிதம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை. அந்தக் கடிதம் என்னிடத்தில் வந்து விட்டால், நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். அப்போது யார் உண்மையைச் சொல்லி இருக்கிறார், யார் பொய் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவந்துவிடும்.

தமிழ்நாட்டு முதல்வரை எடுத்த உடனே நேரடியாகப் பார்த்துப் பேசி விட முடியாது. ஏற்கனவே இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால்தான் நேரில் சந்தித்து ஒரு முடிவெடுத்திருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தது.

ஒபிஎஸ்-சையதுகான்

அதனால் ஓ.பி.எஸ் பற்றிக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர் முடிவு எடுத்ததற்குக் காரணம் சொல்லுகிறார் அவ்வளவுதான். அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு முதல் நாள் நான்தான் அவரைத் தொடர்பு கொண்டேன்.

இதற்கு முன்னால் சட்டமன்றம் நடக்கும்போது பல நேரங்களில் என்னை அழைத்திருக்கிறார். என்னுடைய உதவியாளர்கள் மூலம் என்னிடம் பேசி இருக்கிறார். எனவே, இப்போது அவர் என் மீது குறை சொல்லிருக்கிறார் நான் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க

திருவில்லிபுதூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார்? பொதுக்கூட்ட மேடையில் அறிவித்த சீமான்

தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது,... மேலும் பார்க்க

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இ... மேலும் பார்க்க

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க