செய்திகள் :

திருவில்லிபுதூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார்? பொதுக்கூட்ட மேடையில் அறிவித்த சீமான்

post image

தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, “வட இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது. வட இந்திய வாக்காளர்கள் முழுவதுமே பாஜகவின் வாக்காளர்கள்தான்.

கோவை தெற்கில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாங்கிய 20000 வாக்குகள் வட இந்தியர்களின் வாக்குதான். பாஜக ஆட்சியிலிருந்து வந்ததும் அதிகமான வட இந்தியர்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் திருவில்லிபுதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை கரிகால் பாண்டியன்

இட ஒதுக்கீடு விஷயத்தில் உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை. ஆனாலும் உள் இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள் இப்போது அதில் முன்னுரிமை என்பதை எதிர்க்கிறோம். தேவேந்திர குல வேளாளர்கள் விவசாய குடிகள் அதனால் தான் அவர்களை வேளாளர்கள் என அழைக்கின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல.

தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கச் சொல்லி மத்திய அரசு மூன்று முறை சொல்லியிருக்கிறது. ஆனால் மாநில அரசு இன்னமும் நீக்கவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

திருவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கரிகால் பாண்டியன் போட்டியிடுகிறார் என மேடையில் அறிவித்தார் சீமான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இ... மேலும் பார்க்க

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க