செய்திகள் :

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

post image

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து காவிரியில் மூழ்கி புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர். அணை முனியப்பனுக்கு பொங்கலிட்டு ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் சமைத்த உணவை சாப்பிடவும் அணை பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.

பலர் தங்களது பகுதியில் கோயில்களில் வைத்து வழிபட்ட சாமி சிலைகள், மணி, தட்டு, கத்தி உள்ளிட்ட பூஜை பொருள்களை காவிரி கரையில் வைத்து சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் காவிரி கரையில் அமர்ந்து வேத விற்பனங்கள் மந்திரங்கள் ஓதி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

பாதுகாப்பு பணிக்காக மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்

தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் உள்ளனர். காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் கொளத்தூர் மேச்சேரி பகுதிகளில் 13 இடங்களில் மட்டுமே நீராட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கடைகள் போடப்பட்டுள்ளன.

People gathered to take a holy dip in Mettur, Salem district, on the occasion of the AadiPerukku festival.

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். தமிழக வாக்காளர்... மேலும் பார்க்க

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை(ஆக. 4) முழுக் கொள்ளளவை எட்டும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வெளியிட... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மக்கள் திரண்டுள்ளனர்.விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரித் தாய்க்கு நன்றி... மேலும் பார்க்க