செய்திகள் :

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

post image

தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக பிகார் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 6.5 லட்சம் பேர் சேர்க்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலும் மேலும் வினோதமாகி வருகிறது.

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது. இது சட்டவிரோதமானதும்கூட.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்' என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தாங்கள் விரும்பும் ஆட்சியை தேர்வு செய்யும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் அவர்கள் தலையிடுவது போன்றதாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள், வழக்கமாக செய்ததுபோலவே, பிகார் அல்லது அவர்களின் சொந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏன் வாக்களிக்கக் கூடாது?

சத் பூஜை விழாவின்போது புலம்பெயர் தொழிலாளர்கள், பிகாருக்குச் செல்கிறார்கள்தானே?

வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிகாரில் அல்லது அவரின் சொந்த மாநிலத்தில் வீடு உள்ளது. அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?

பிகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து அங்கு வாழ்ந்துவரும் சூழ்நிலையில் அவர்களை தமிழ்நாட்டில் "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று எவ்வாறு கருத முடியும்?

தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது.

இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலினையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Congress Leader P chidambaram says that ECI is abusing its powers and trying to change the electoral character and patterns of States

இதையும் படிக்க | நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லை... மேலும் பார்க்க

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை(ஆக. 4) முழுக் கொள்ளளவை எட்டும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வெளியிட... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்... மேலும் பார்க்க