செய்திகள் :

மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, ''சத்ரபதி சிவாஜியின் தலைநகரமான ராய்கட்டில் டான்ஸ் பார்கள் நடக்கக்கூடாது. ராய்கட் மாவட்டத்தில் அதிகப்படியான டான்ஸ் பார்கள் செயல்படுகின்றன. அவை யாருக்குச் சொந்தம். அவை மராத்தியர்களுக்கு மட்டுமா சொந்தம்? உங்களை டான்ஸ் பார்களுக்கு அடிமையாக்கிவிடுவார்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராஜ் தாக்கரேயின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவரது கட்சித் தொண்டர்கள் 10க்கும் மேற்பட்டோர் பன்வெலில் உள்ள நைட் ரைடர் பாருக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர்.

மதுபாட்டில், இருக்கைகள், கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அவர்கள் அடித்துச் சேதப்படுத்தினர். அவர்கள் கம்புகளுடன் சென்று அடித்து உடைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், ''கட்சித் தொண்டர்களின் நடவடிக்கை 'அடையாள போராட்டம்' ஆகும். டான்ஸ் பார்கள் சட்டவிரோதமானவை. அதனால்தான் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

இது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ள போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே ராஜ் தாக்கரே கட்சியினர் மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். மராத்தி பேசாத வியாபாரிகளை ராஜ் தாக்கரே கட்சியினர் மும்பையில் ஆங்காங்கே அடித்து உதைத்த சம்பவங்கள் நடந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இப்போது ராஜ் தாகக்ரே கட்சியுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொண்டர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பன்வெல் பகுதியில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க

திருவில்லிபுதூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார்? பொதுக்கூட்ட மேடையில் அறிவித்த சீமான்

தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது,... மேலும் பார்க்க

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இ... மேலும் பார்க்க