செய்திகள் :

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

post image

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழாவின்போது மேடையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியபோது, பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தரக்குறைவாக பேசியது அந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு மாறாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைதளத்தில் பாமக தருமபுரி மாவட்ட துணை தலைவர் மந்திரி படையாட்சி அவதூறு கருத்து பரப்பியதாக பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதன்பேரில் பென்னாகரம் போலீஸார் மாவட்ட துணைத் தலைவர் மந்திரி படையாட்சியை கைது செய்தனர். இதனை அறிந்த அந்த கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் சுதா கிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

மறியலில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்ய குண்டு கட்டாக தூக்கி, இழுத்துச் சென்றனர். இதனால் பாமகவினர் போலீஸார் இடையே தகராறு ஏற்பட பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே பாமகவினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

More than a hundred members of the party staged a road blockade in front of the Pennagaram police station to protest the arrest of the Dharmapuri district PMK executive.

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

சண்டீகர் மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சேர்ந்த குற்றவாளியை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் சிபிஐ போலீஸார் கைது செய்தனர். கோவை மாவ... மேலும் பார்க்க