செய்திகள் :

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

post image

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதிய, மதவாத சக்திகள், வெளிப்படையாக சாதிய, மதவாதத்தைப் பேசுகிற அரசியல் கட்சிகள் தவிர மற்ற அனைத்தும் தோழமைக் கட்சிகள்தான்.

அவர்களுடன் எங்களால் இணைந்து பயணிக்க முடியும்.

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.

ஓபி.எஸ், தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சி தான். கூட்டணி கட்சிகள் நல்லிணக்கத்தோடு தொகுதிகளை பிரித்து கொள்வோம், அதில் பிரச்னையில்லை. ஆணவ கொலைகளைக் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணி அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Thirumavalavan said he was happy that OPS had come out of the clutches of the BJP.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழா... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

சண்டீகர் மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சேர்ந்த குற்றவாளியை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் சிபிஐ போலீஸார் கைது செய்தனர். கோவை மாவ... மேலும் பார்க்க