செய்திகள் :

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

post image

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மகன்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராஜா, மீனா ஆகியோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுமி கவிஷாவை, ராஜாவின் தாய் சாந்தி அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வழக்கமாக மாலையில் அங்கன்வாடியிலிருந்து சிறுமி கவிஷா தானாக வந்துவிடும் நிலையில், 30ம் தேதி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பாட்டி சாந்தி அங்கன்வாடி மையத்திற்குச் சென்று விசாரித்த போது காலையிலேயே சிறுமி வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கவிஷா
சிறுமி கவிஷா

இதைத்தொடர்ந்து தேவூர் போலீஸிடம் ராஜா புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அங்கன்வாடி மையத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், ராஜாவின் வீடு மற்றும் அங்கன்வாடி மையம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாயமான சிறுமி கவிஷாவை குடும்பத்தினரை விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அது தொடர்பாக பாட்டி சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருப்பத்தூர்: பள்ளி வளாக கிணற்றுக்குள் மாணவன் சடலம்... கொலையா? - உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ ... மேலும் பார்க்க

15 வயதில் காதல் திருமணம்; உறவில் விரிசல்; கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி

டெல்லியில் உள்ள அலிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சோனியா (34). இவரது கணவர் பிரித்தம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஹரியானாவில் உள்ள சோனிப... மேலும் பார்க்க

ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா என்ற இடத்தில் கடந்த 19ம் தேதி 15 வயது பெண் 75 சதவீத தீக்காயத்துடன் புபனேஷ்வர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு மூன்று பேர் தீ வைத்... மேலும் பார்க்க

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரி... மேலும் பார்க்க