செய்திகள் :

15 வயதில் காதல் திருமணம்; உறவில் விரிசல்; கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி

post image

டெல்லியில் உள்ள அலிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சோனியா (34). இவரது கணவர் பிரித்தம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் டெல்லியில் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி ஹரியானாவில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் இருக்கும் தன் சகோதரி வீட்டிற்கு சோனியா சென்றிருந்தார். அவரை அழைத்து வர பிரித்தம் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தம் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி சோனியா தனது கணவரை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கடந்த ஒரு ஆண்டில் பிரித்தம் எந்த வித பண பரிவத்தனையிலும் ஈடுபடவில்லை. அதோடு பிரித்தம் எங்கேயும் தென்படவில்லை. ஆனால் திடீரென பிரித்தம் பெயரில் எடுக்கப்பட்ட சிம் கார்டு ஒன்று ஆக்டிவிற்கு வந்தது. அந்த போன் நம்பரை போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர். அந்த போன் சோனிபட் பகுதியில் பயன்பாட்டில் இருந்தது. அதனை பயன்படுத்திய ரோஹித் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ரோஹித்திற்கும் சோனியாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. அவர் பிரித்தத்தை கொலை செய்த விபரத்தை தெரிவித்தார்.

அவரிடம் விசாரித்தபோது சோனியா தன் சகோதரியின் கணவர் விஜய்க்கு பணம் கொடுத்து பிரித்தத்தை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து சோனியாவைப் பிடித்து விசாரித்த போது, கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பிரித்தம் தன் மனைவியிடம் வந்து தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். உடனே சோனியா தன் சகோதரியின் கணவர் விஜயிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து தன் கணவனைக் கொலை செய்துவிடும்படி கூறி இருக்கிறார். தகராறு செய்து விட்டு வெளியில் சென்ற பிரித்தம் மீண்டும் வீட்டிற்கு வந்து தன்னை வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சோனியாவிடம் கேட்டுக்கொண்டார்.

சோனியாவும் சம்மதித்துள்ளார். பிரித்தம் வீட்டின் மாடியில் படுத்து உறங்கி இருக்கிறார். அவ்வாறு உறங்கியபோது விஜய் அவரைக் கொலை செய்துள்ளார். உடலை அருகில் உள்ள சாக்கடைக்கு எடுத்துச் சென்று விஜய் வீசியிருக்கிறார். அதோடு பிரித்தம் உடலை போட்டோ எடுத்து அதனை சோனியாவிற்கு விஜய் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி இருந்தார். பிரித்தம் ஓட்டி வந்த ஆட்டோவை சோனியா ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். பிரித்தம் பயன்படுத்திய சிம்கார்டை தனது காதலன் ரோஹித்திடம் கொடுத்துள்ளார்.

ஹரியானா சோனிபட் பகுதியில் போலீஸார் அடையாளம் தெரியாத உடல் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த உடல் டி.என்.ஏ.மாதிரியை எடுத்து வைத்திருந்தனர். தற்போது பிரித்தம் கொலை வழக்கில் துப்பு துலங்கி இருப்பதால் பிரித்தம் குழந்தைகளின் டி.என்.ஏ. மாதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். சோனியா தனது 15வது வயதில் பிரித்தத்தை காதலித்து கரம்பிடித்தார். அவர்களது திருமணத்திற்கு சோனியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

நாளடைவில் அவர்களது திருமணத்தை சோனியாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் 16 வயது மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். விஜய் மீது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. விஜய் இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார... மேலும் பார்க்க

ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா என்ற இடத்தில் கடந்த 19ம் தேதி 15 வயது பெண் 75 சதவீத தீக்காயத்துடன் புபனேஷ்வர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு மூன்று பேர் தீ வைத்... மேலும் பார்க்க

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரி... மேலும் பார்க்க

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க