செய்திகள் :

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

post image

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக ட்ரம்ப் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். ஏற்கெனவே சசி தரூர் மற்றும் காங்கிரஸ் இடையே உரசல் போக்கு தொடர்வதனால் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியுடன் சசி தரூர்
ராகுல் காந்தியுடன் சசி தரூர்

இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

"எங்கள் சொந்தக் கட்சியின் தலைவர் கூறியவற்றில் நான் கமண்ட் செய்ய விரும்பவில்லை. அவர் கூறிய கருத்துக்களுக்கான காரணங்கள் அவரிடம் உள்ளன." எனக் கூறியுள்ளார் சசி தரூர்.

"அமெரிக்க சந்தையை இழந்துவிடக்கூடாது"

"என்னுடைய கவலை அமெரிக்காவுடனான இலக்குகளை அடைவது மற்றும் பொருளாதார கூட்டுறவைப் பற்றியது. இது இந்தியாவுக்கு முக்கியமானது. நாம் சுமார் 90 பில்லியன் டாலர் வரை சரக்குகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதை இழக்கும் இடத்தில் நாம் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

சிலர் இது நமது ஜி.டி.பி-யில் வெறும் 2 சதவிகிதம் என்கின்றனர். ஆனால் நம் ஏற்றுமதியைக் கணக்கில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியமானது. அமெரிக்கா நம்முடைய மிகப் பெரிய சந்தைகளில் ஒன்று.

இந்த ஒட்டுமொத்த கட்டண கேள்விகளையும் கருத்தில்கொண்டால், நாம் இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம் அமைய பேரம் பேசுபவர்கள் வலிமையாகவும் தைரியமாக இருக்க விரும்ப வேண்டும்.

பேரம் பேசும்போது நாம் ஒன்றை இழப்போம் ஒன்றைப் பெறுவோம். அதில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். அதே வேளையில் நமது தேசத்தின் சில அடிப்படை விருப்பங்கள் மீறப்படக்கூடாது.

அமெரிக்காவின் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளும் நாம், அதே வேளையில் பிற நாடுகளிலும் சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.

நாம் யு.கேயுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகள் நல்ல நிலையில் இருக்கின்றன. ஜப்பானுடனான பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் எல்லாவற்றையும் இழக்க முடியாது. சிலவற்றை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இது நாம் நமக்காக பேரம் பேசுபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் என நான் கருதுகிறேன்." எனப் பேசினார்.

IND vs PAK: "இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்தை விட முக்கியமா?" - BCCI-ஐ மீது மகா., எம்.பி தாக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.அந்த எதிர்ப்புகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சமீ... மேலும் பார்க்க

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட... மேலும் பார்க்க

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த... மேலும் பார்க்க

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க