செய்திகள் :

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

post image

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அமைச்சர்களை இங்கு அழைத்து வருவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தேசிய விருது படைப்புத்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர். அவர்களும் தேசிய விருது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் சித்தாந்தங்களை அதிமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். அப்படியென்றால் திமுக - பாஜக கூட்டணியிலிருந்தபோது, பாஜக கருத்தியலுடன் முழுமையாக ஒத்துழைத்து கூட்டணி வைத்திருந்தார்களா எனத் திமுகவிடம் திருமாவளவன் கேட்டுச் சொல்ல வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் வருவார்கள் என்பதை தேசிய தலைமை அறிவிக்கும். எங்கள் கூட்டணிக்கும் கட்சிகள் வருவார்கள். வரும்போது ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து வருவார்கள். எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுகவுக்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைப்பது மட்டுமே இலக்கு.

தமிழகத்தில் யாரெல்லாம் வாக்காளர்கள் என்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வைத்துள்ளது. மும்பை, டெல்லியில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள். வாக்குரிமை பெறக் குறிப்பிட்ட ஆண்டு அந்தப் பகுதியில் குடியிருக்க வேண்டும். பிற மொழி பேசுபவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் எங்கேயும் இல்லை.

வாக்குரிமை
வாக்குரிமை

இதில் விதிகள் மீறப்பட்டிருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். வடமாநில தொழிலாளர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் வெறுப்பு கருத்துகளைப் பேசுகிற, அரசியல் பிரிவினைவாதம் பேசும் சில தலைவர்கள் இதைப் பேசுகின்றனர்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட... மேலும் பார்க்க

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த... மேலும் பார்க்க

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க