செய்திகள் :

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

post image

ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்புவதால் பேட்டிங் குறைபாடுகள் நீங்கும் என சிஎஸ்கேவின் தற்காலிக கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டியளித்துள்ளார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் டாப் 10-இல் கடைசியில் முடித்தது. இதைவிட மோசமான ஆண்டாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு அமையாது என விமர்சனங்கள் வந்தன.

ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதால் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். இருந்தும் சிஎஸ்கே அணிக்கு 4 வெற்றிகள் மட்டுமே கிடைத்தது.

சென்னையில் மேக்ஸ்விஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தோனி சிஎஸ்கே அணி குறித்து பேசியதாவது:

ருதுராஜ் வருகிறார்

கடந்த சீசனில் பேட்டிங் ஆர்டர் ஒரு குறையாக இருந்தது. ஆனால், தற்போது சீரானது போலிருக்கிறது. ருதுராஜ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதனால், பேட்டிங் பிரச்னை இல்லை.

2025-இல் சிஎஸ்கே தளர்ந்துபோய்விட்டது எனக் கூறமாட்டேன். ஆனால், சில ஓட்டைகளை அடைத்தாக வேண்டும்.

வரும் டிசம்பரில் மினி ஏலம் வருகிறது. அதில் அந்த ஓட்டைகளை நிரப்ப வேண்டும்.

கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. நல்ல சீசன் மாதிரி மோசமான சீசனும் வரும். அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம்.

குறைகளைச் சரிசெய்வோம்

என்ன பிரச்னை என்பது சரியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும். விளையாட்டில் உங்களுக்கு நல்ல நேரமும் இருக்கும் மோசமான நேரமும் இருக்கும்.

பொதுவாக சிஎஸ்கே அணி எப்போதும் நன்றாக விளையாடும் அணியாக இருக்கும். அதனால், செயல்பாடுகளை மட்டுமே பேச வேண்டும். அதேசமயம் நல்ல முடிவுகளும் வர வேண்டும். அது கடந்த சீசனில் கிடைக்கவில்லை.

குறைகளைச் சரிசெய்து எங்களது சிறந்த செயல்பாடுகளை அளிப்போம் என்றார்.

Legendary MS Dhoni said on Saturday the return of Ruturaj Gaikwad will bolster Chennai Super Kings' batting in the next edition of the IPL, after the top-order batter pulled out mid-way through the previous season with an elbow injury.

இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஐபிஎல் நிறைவடைந்த பிறகு கடிமனாக உழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்று... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி தனது உடல்நலம் விளையாட இன்னும் தகுதியாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 44 வயதாகும் தோனிக்க... மேலும் பார்க்க

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

இந்திய வீரர் முகமது சிராஜ் வெளிநாட்டில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.இந்தத் ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 374 ரன்கள் முன்னிலை பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.England... மேலும் பார்க்க

இந்தத் தொடரின் அதிவேக அரைசதம்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிவேக அரைசதம் கடந்து அசத்தினார் இந்திய ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர். அவர் 39 பந்துகளை மட்டுமெ எதிர்கொண்டு டி20 ஸ்டைலில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார்... மேலும் பார்க்க