செய்திகள் :

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

post image

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட மலை மாடுகள் அழைத்து வரப்பட்டன. மாடுகளை மேய்த்துக் கொண்டு சீமான் செல்லும்போது போராட்டத்தை நிறுத்தச் சொல்லி வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாடுகள் வனப்பகுதிக்குள் நுழைவதற்குத் தடையாக பேரிகார்டுகளையும் வைத்து வழியை மறைத்தனர்.

மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட மாடுகள்

நாம் தமிழர் கட்சியினர் தடையை அகற்றச் சொல்லி பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரிகார்டுகளை அகற்றிவிட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?.

தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன. புதுகோட்டை, சிவகங்கை பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போகிறது மாடு மேய்க்கும் கீதாரிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

தடையை மீறி மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர்.

வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலைகளில் ஆடு மாடுகள் மேய்வதால் மலையில் தீ பற்றினாலும் அது பரவாமல் தடுக்கபடும். ஆடு மாடுகளின் சாணம் மண்ணிற்கு உரமாகும். காடு செழிப்படையும். மலைகளில் ஆடு மாடு மேய்ப்பதைத் தடுத்தால் திரும்பவும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்" என்றார்.

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக... மேலும் பார்க்க

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த... மேலும் பார்க்க

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க