செய்திகள் :

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

post image

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.

அந்த வகையில் அதிமுக சீனியர் தலைவர் ஜெயக்குமார் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக செய்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் சபாநாய்கர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "என்னைப் பற்றி கூட வதந்தி பரப்புகிறார்கள். என்னால் ஒரு யூடியூபர் ஒரு மீடியாவுக்கு வருமானம் வந்தால் மகிழ்ச்சிதான். தினமும் லைம் லைட்டில் இருக்கணும்.

(திமுகவில் இணைவது) நடக்காத ஒரு விஷயம். ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று. யார் வீட்டு முன்னாடியும் பதவிக்காக நின்ன ஆள் ஜெயக்குமார் கிடையாது. நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் பெரியார் வழியில் அண்ணா வழியில் வந்தவர்கள். அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். காலம்காலமாக ஓடுவது அண்ணா திமுக ரத்தம்தான். உடல் மண்ணுக்கு உயிர் அஇஅதிமுகவுக்கு" எனப் பேசினார்.

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட... மேலும் பார்க்க

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக... மேலும் பார்க்க

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த... மேலும் பார்க்க

OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க