செய்திகள் :

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

post image

இந்திய வீரர் முகமது சிராஜ் வெளிநாட்டில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

மூன்றாம் நாளின் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஜாக் கிராலி ஆட்டமிழந்தார். அத்துடன் ஆட்டம் முடிக்கப்பட்டது.

இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 324 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிபெற 8 விக்கெட்டுகள் தேவையாக இருக்கிறது.

கிறிஸ் ஓக்ஸ் வெளியேறியதால் இங்கிலாந்து 9 விக்கெடுகள் மட்டுமே பேட்டிங் விளையாட முடியுமென்பது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் யாருமே நினைக்காத போது கம்பேக் கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த சிராஜுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

சோனி ஸ்போர்ட்ஸ் டிஎஸ்பி சிராஜ் எனக் குறிப்பிட்டு அவரது ரொனால்டோ பாணியிலான கொண்டாட்டத்தை பதிவிட்டுள்ளது.

Indian player Mohammed Siraj has set a record by taking 100 Test wickets abroad.

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி தனது உடல்நலம் விளையாட இன்னும் தகுதியாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 44 வயதாகும் தோனிக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.இந்தத் ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 374 ரன்கள் முன்னிலை பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.England... மேலும் பார்க்க

இந்தத் தொடரின் அதிவேக அரைசதம்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிவேக அரைசதம் கடந்து அசத்தினார் இந்திய ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர். அவர் 39 பந்துகளை மட்டுமெ எதிர்கொண்டு டி20 ஸ்டைலில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார்... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வர... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க