செய்திகள் :

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

post image

சண்டீகர் மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சேர்ந்த குற்றவாளியை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(49). இவரும், சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரும் என 6 பேரும் சேர்ந்து பெங்களூரில் கடந்த 2016ஆம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அப்போது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு பணம் இரட்டிப்புத் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை நம்பி நாடு முழுவதும் சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு உரிய வட்டி பணத்தையும், திருப்பி பணத்தை கேட்டவர்களுக்கு பணத்தையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதில் சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலீடு செய்த ஏமாற்றமடைந்த சண்டீகர் பகுதியினர் அங்குள்ள நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத்தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு கடந்த 2017-ல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்த நிலையில் தலைமறைவான குற்றவாளி சிவக்குமாரை மட்டும் சிபிஐ போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சிவக்குமார் கரூர் தாந்தோணிமலை கணபதி நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக புவனேஸ்வர் சிபிஐ போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

இதையடுத்து கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்த புவனேஸ்வர் சிபிஐ காவல் ஆய்வாளர் ஷனட்டன் தாஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அனுமதியுடன் கணபதிபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து சிவக்குமாரை தாந்தோணிமலை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, சண்டீகர் மாநிலம் புவனேஸ்வருக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றனர்.

A Coimbatore accused wanted in a money laundering case in Chandigarh was arrested by the CBI police in Karur.

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழா... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க