செய்திகள் :

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

post image

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர்.

அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வாகனத்தில் சாலைப் பயணம் மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களின் வாகனம் பிக் வீலிங் க்ரீக் சாலையில் ஒரு செங்குத்தான கரையின் அடிப்பகுதியில் இருந்து சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

விபத்தில் காரில் இருந்த மூத்த குடிமக்களான ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சம்பவ இடத்தை அடைய மீட்புக் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Four senior citizens of Indian origin who went missing earlier this week during a road trip were found dead following a vehicle crash on Saturday night, the Marshall County Sheriff's Office confirmed.

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை ... மேலும் பார்க்க

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை ‘உரிய பகுதிகளுக்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் புதிதாக 8 இந்திய தூதரக சேவை மையங்களை அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா காணொலி வழியாக திறந்துவைத்தாா்.அமெரிக்காவில் உள்ள பாஸ்டன், கொலம்பஸ், டல்லஸ், டெட்ராய்ட், எடிசன், ஓா்லாண்டோ,... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியா்களுக்கு முதலிடம்

நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனா்.இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நேபாளத்துக்கு 70,193 சுற... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 43 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 போ் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபா் முதல் நடத்திவரும் தாக்குதல... மேலும் பார்க்க

ஆக. 5-இல் ஜூலை பிரகடனம்: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், அது தொடா்பான ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால ... மேலும் பார்க்க