செய்திகள் :

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

post image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில் ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஆனால், நயினார் நாகேந்திரனை 6 முறை போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்ததாகவும் அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை எனவும் அதனால் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறுகிறார்.

ஓபிஎஸ் சொல்வதில் உண்மையில்லை, நான்தான் ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்டேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இருவரும் மாறிமாறி பேசி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தலைவர்கள் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ்ஸுக்கு கருத்து இருந்தால் அதை அவர் வெளிப்படையாகச் சொல்லலாம். அவர், பாஜக தலைவர்களை குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தன்னுடைய அரசியல் நகர்வை நகர்த்தியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதி, மத்திய அரசை எதிர்த்து, தினமும் போராடி வருவதாகக் கூறுகிறார். மத்திய அரசு தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறது? மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. மக்கள் போராடுகிறார்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் மக்கள் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நேரெதிராக இருந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்வரைச் சென்று சந்திக்கிறார். உடல்நிலை பற்றிய விசாரிப்பு தவறு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தவர்களை சந்தித்து கூட்டணிக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால் அது துரோகம்.

அருண் ஜெட்லீ இறந்தபிறகு அவர் மீது ராகுல் காந்தி குற்றம் சாடுகிறார். திமுக 5 முறை ஆட்சியில் இருந்தும் சமூக நீதியை நிலைநாட்ட முடியவில்லை. ஆணவக் கொலைகள் இன்றும் நடப்பது வெட்கக்கேடு" என்று பேசினார்.

Senior BJP leader Tamilisai Soundararajan has said that we will not accept OPS blaming Tamil Nadu BJP leader Nainar Nagendran.

இதையும் படிக்க | ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். தமிழக வாக்காளர்... மேலும் பார்க்க

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை(ஆக. 4) முழுக் கொள்ளளவை எட்டும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வெளியிட... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மக்கள் திரண்டுள்ளனர்.விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரித் தாய்க்கு நன்றி... மேலும் பார்க்க