செய்திகள் :

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

post image

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனை அவனின் தந்தை துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார்.

கேரள மாநிலம், திரிசூர் மாவட்டதில் உள்ள மலக்கப்பராவின் வீரன்குடி பழங்குடியினர் குடியிருப்பில் பேபி என்பவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு தற்காலிக குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் குடிசைக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அவரது 4 வயது குழந்தை ராகுலை இழுத்துச் சென்றது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை பேபி, உடனே கல்லை எடுத்துக்கொண்டு சிறுத்தையை பின்தொடர்ந்துள்ளார். இதனால் பின்வாங்கிய சிறுத்தை அந்த சிறுனை விட்டுச் சென்றது. தலையில் பலத்த காயமடைந்த ராகுல் முதலில் மலக்கப்பராவில் உள்ள மருத்துவமனைக்கும் முதலுதவிக்குப் பிறகு, சாலக்குடி வட்டம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டான்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

காயம் மோசமாக இருந்ததால், அறுவை சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுத்தை குடிசைக்குள் நுழைந்து ராகுலை இழுத்துச் சென்றபோது, தம்பதியினரின் இரண்டு வயது மகளும் அவர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இதனிடையே திரிசூர் ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன், குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அடர்ந்த காடுகள் மற்றும் தோட்டங்களையொட்டிய பகுதிகளில், இதேபோன்ற தொடர்ச்சியான வனவிலங்குகள் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

A four-year-old boy was rescued after a leopard attacked him in the Veerankudy tribal settlement of Malakkappara, in Kerala’s Trissur district in the wee hours on Saturday.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்க... மேலும் பார்க்க

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், பன்வேலின் புறநகரில் உள்ள நைட் ரைடர்ஸ் பாரில் மகாராஷ்டிர நவநிர்ம... மேலும் பார்க்க

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க