செய்திகள் :

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

post image

நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், பன்வேலின் புறநகரில் உள்ள நைட் ரைடர்ஸ் பாரில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் குழு சனிக்கிழ்மை இரவு நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியோடு மது பாட்டில்களையும் உடைத்துள்ளனர். இந்த தாக்குதலின் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

அதில் உடைந்த மேசைகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் நிறுவனத்தின் உட்புறங்கள் சூறையாடப்பட்டிருந்தன. "சத்ரபதி சிவாஜி மகாராஜின் புனித பூமியில் நடன பார்களுக்கு இடமில்லை. பன்வேலியிலோ அல்லது மாநிலத்தில் வேறு எங்கும் இதுபோன்ற ஆபாசங்கள் செழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று நவநிர்மாண் சேனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பன்வேல் போலீஸார் இந்த சம்பவத்தை அறிந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். "நாங்கள் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று வருகிறோம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

Activists of the Maharashtra Navnirman Sena (MNS) launched an attack at a dance bar in Navi Mumbai and vandalised the premises, police said on Sunday.

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்க... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனை அவனின் தந்தை துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார். கேரள மாநிலம், திரிசூர் மாவட்டதில் உள்ள மலக்கப்பராவின் வீரன்குடி பழங்குடியினர் குடியிருப்பில் பேபி என்பவர் தனத... மேலும் பார்க்க

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க