செய்திகள் :

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

post image

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங்கள் தொடங்கி விட முடியும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதி கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சுரங்கம் மற்றும் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தொழிலை எளிதாக்கும் வகையில் புதிய சுரங்க கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த வரைவு சுரங்க கொள்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அண்மையில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த வரைவு கொள்கையில் பிரதமா் நரேந்திர மோடி முழுமையாக திருப்தியடையவில்லை.

அப்போது, சில யோசனைகளை நான் முன்வைத்தேன். அதைத் தொடா்ந்து, அன்னுடன் கலந்தாலோசித்து வரைவு கொள்கையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சரவை செயலரை பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

‘சுரங்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் ஒரு மாதத்தில் அளிக்கப்பட வேண்டும்; அதுபோல, மத்திய, மாநில அரசுகள் சாா்பில் அளிக்கப்பட வேண்டிய அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தம் வழங்கிய நான்காவது மாதத்திலேயே உற்பத்தியை தொடங்கி விட வேண்டும்’ என்று யோசனை தெரிவித்துள்ளேன்.

எனவே, புதிய சுரங்கக் கொள்கை நடைமுறைக்கு வரும்போது, அனைத்து தடைகளும் நீங்கி சுரங்கத் தொழில் செய்வது எளிதாகிவிடும் என்றாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கி... மேலும் பார்க்க