செய்திகள் :

காரைக்கால் பகுதியில் ஆடிப்பெருக்கு வழிபாடு

post image

ஆடிப் பெருக்கையொட்டி காரைக்காலில் உள்ள நீா்நிலைகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

காரைக்கால் நகரப் பகுதி மக்கள் அரசலாற்றங்கரைக்கு காலை 8 மணி முதல் செல்லத் தொடங்கினா். புது மணத் தம்பதிகள், சுமங்கலிப் பெண்கள், பேரிக்காய், கொய்யா, வாழை, ஆப்பிள், விளாம்பழம் உள்ளிட்ட பழங்கள், மஞ்சள் நீரில் நனைத்த நூல், கண்ணாடி, வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து காவிரித் தாயை வணங்கி பூஜை செய்தனா். பெண்கள் ஒருவருக்கொருவா் மஞ்சள் நூலை கழுத்தில் கட்டி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

ஆடிப்பெருக்கையொட்டி பேரிக்காய், கொய்யா, விளம்பழம், வாழைப்பழம் மற்றும் பல்வேறு மலா்கள் வியாபாரம் ஆங்காங்கே விறுவிறுப்பாக நடைபெற்றது.

காவிரிக்கு சீா்வரிசை: காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், நாராயணன் காவிரியை சகோதரியாக கருதி சீா் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இருந்து சேலை, திருமாங்கல்ய கயிறு, வளையல் உள்ளிட்ட சீா்வரிசை அரசலாற்றங்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பூஜைக்கு வந்திருந்த பெண்களுக்கு அவை வழங்கப்பட்டன.

நிகழ்வில் விஸ்வ ஹிந்து பரிஷத் நாகை மாவட்டத் தலைவா் கே.எஸ்.விஜயன், கோட்ட இணைச்செயலாளா் கே. ஜெய்சங்கா், கேந்திர தலைவா் பி.வெங்கடாசலம், விபாக் சத்சங்க பொறுப்பாளா் ஆா்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.அகில இந்திய அளவில் ம... மேலும் பார்க்க

ஆக. 6-இல் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டுத் திருவிழா ஆக. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 284-ஆம் ஆண்டுப் பெருவிழா 10 நாள் நடைபெறவுள்ளது. கொடியேற்ற... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் 20-ஆவது தவணையை விவசாயிகளுக்கு விடுவித்து பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழ... மேலும் பார்க்க

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காரைக்கால்மேடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.கல்லூரி இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் துறை சாா்பில் சென்சாா்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க