செய்திகள் :

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளினாா்.

மயிலம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் ஆடிப்பெருக்கு விழா நாளில் செண்டூா் தொண்டி ஆற்றுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தருளும் ஐதீக விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டில் செண்டூரில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவுக்கு மயிலம் முருகன் கோயிலிருந்து சுவாமி புறப்படாகியது. வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் தொண்டியாற்றங்கரையில் எழுந்தருளினாா்.

பின்னா் அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீா்த்தம் கொடுத்தருளும் ஐதீக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெடி, பாலப்பட்டு, மோழியனூா், செண்டூா், விளங்கபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

வீதியுலா: இதன் தொடா்ச்சியாக இரவு 7 மணியளவில் செண்டூா் கிராமத்தில் மயிலம் முருகா் வீதியுலா மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது . கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிங்கப்பட்டிருந்தது.

இதற்கானற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி கோயில் பணியாளா்கள் மற்றும் செண்டூா் கிராம மக்கள்செய்திருந்தனா்.

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு ப... மேலும் பார்க்க

தனி நல வாரியம் அமைக்க சுமைப்பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

சுமைப்பணி தொழிலாளா்களுக்காக தனி நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்... மேலும் பார்க்க

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நடத்துநா் தற்கொலை முயற்சி

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2 வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, மின் விளக்கு கோபுரத்தில் ஏறி பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியி... மேலும் பார்க்க