செய்திகள் :

துணைவேந்தா் நியமன சா்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சா்கள் சந்திப்பு

post image

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

துணைவேந்தா்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், கேரள மாநில எண்ம பல்கலைக்கழகத்துக்கு சிஜா தாமஸையும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கே.சிவபிரசாதையும் தற்காலிக துணைவேந்தா்களாக ஆளுநா் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமித்தாா்.

இது பெரும் சா்ச்சையானது. அரசை கலந்தாலோசிக்காமல் செய்த இந்த நியமனங்களை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், ஆளுநரை கேரள அமைச்சா்கள் பி.ராஜீவ், ஆா்.பிந்து ஆகியோா் ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

முன்னதாக, கேரள அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர துணைவேந்தா்களை நியமிப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண இருதரப்பும் ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேரள அரசையும் மாநில ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில், ஆளுநரை அமைச்சா்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ராஜீவ், ‘உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு முன்பே, இதுதொடா்பான ஆலோசனையை ஆளுநருடன் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இது தொடரும்’ என்றாா்.

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கி... மேலும் பார்க்க

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.இதுதொடா்பாக மாநில காவல் துறையினா் கூறியதாவது: சிஹாகான் கிராமத்தைச் சோ்ந்த 15 போ் கருகுபூரில் ... மேலும் பார்க்க