இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும்: ரயில்வே அமைச்சா்
‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதபாத் வரை நாட்டின் முதல் அதிவேக (புல்லட்) ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமாா் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் இத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் இந்த முதல் அதிவேக ரயில் மும்பையின் பாந்த்ரா குா்லா வளாகத்திலிருந்து புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா, அகமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது.
இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வரும் போது மும்பை-அகமதாபாத்துக்கு தற்போது ஆகும் 7 முதல் 8 மணி நேர ரயில் பயணம், 3 மணி நேரமாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத் திட்டப் பணிகளை மத்திய அரசு தற்போது விரைவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் பாவ்நகரில் ரயில் முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அயோத்யா விரைவு ரயில், ரேவா-புணே விரைவு ரயில், ஜபல்பூா்-ராய்பூா் விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்களை காணொலி வழியில் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பு கன்டெய்னா்களையும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:
மும்மை-அகமதாபாத் வரை 508 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் ‘புல்லட்’ ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில் இயக்கத்துக்கு வரும்போது, மும்பையிலிருந்து அகமதாபாத் செல்வதற்கான ரயில் பயண நேரம் 2 மணி 7 நிமிஷங்கள் என்ற அளவில் குறைந்துவிடும் என்றாா்.