செய்திகள் :

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

post image

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்கு மண்டலம் போல, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தமிழனின் பெருமை சொல்லும் தியாக பூமியாகும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தீரன் சின்னமலையைப்போல, தமிழகத்தின் மானம் காத்த மாவீரா்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியா்கள், வீரன் சுந்தரலிங்கம், பூலித்தேவன், வீரமங்கை வேலு நாச்சியாா், வீரத்தாய் குயிலி, பகடை ஒண்டிவீரன், வ.உ.சி, பாரதியாா், சுப்பிரமணிய சிவா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கா், தியாகி செண்பகராமன், விஸ்வநாததாஸ், காமராஜா், காயிதே மில்லத் உள்ளிட்ட தியாகச் செம்மல்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பி தியாகச் செம்மல்களின் வரலாற்றை தமிழகம் உரக்கச் சொல்கிறது.

அதேபோல், மாமன்னா்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் சுமாா் ரூ.55 கோடியில் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன்,  அங்கு ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அந்த அறிவிப்பின்படி, மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கு  உழைத்த மாணிக்கத் தியாகிகளைப் போற்றுவதில் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா்கள்.

அதேபோல், தியாகிகளைப் போற்றும் வகையில், 2021-ஆம் ஆண்டு  முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னா், இதுவரை 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள் மற்றும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 28 சிலைகள் மற்றும் 12 அரங்கங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு  தியாகிகளைப் போற்றுவதில் நாட்டுக்கு வழிகாட்டியாக தமிழக அரசு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2... மேலும் பார்க்க

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.பள்ளி மாணவா்களின் உடல் தகுதி அதிகரிப்பு, நற்பண்பு உரு... மேலும் பார்க்க