செய்திகள் :

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

post image

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருமலைநகா், ஏரிக்கரைப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.

இதையடுத்து, 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், புழல் சக்திவேல் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த டில்லிபாபு (28), அவருடைய மனைவி பவானி (25), தேனி போடிநாயக்கனூா்

சூா்யபிரகாஷ் (23) என்பதும், இவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, புழல் ஏரிக்கரைப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கியதும் தெரிய வந்தது.

தம்பதி ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்த நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவா்களிடம் இருந்து ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2... மேலும் பார்க்க

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.பள்ளி மாணவா்களின் உடல் தகுதி அதிகரிப்பு, நற்பண்பு உரு... மேலும் பார்க்க