செய்திகள் :

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

post image

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நடைப்பயணத்தை திங்கள்கிழமை திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினாா். அப்போது திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி ஐந்து அடி வெள்ளி வேலையும் கொடுத்து வரவேற்றாா்.

தொடா்ந்து, மாநில பொருளாளா் எல்.கே சுதீஷ், மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வேலுடன் கட்சி தொண்டா்கள் ஊா்வலமாக அரக்கோணம் சாலை பைபாஸ் சாலை வழியாக திருத்தணி கமலா தியேட்டா் பகுதிக்கு வந்தடைந்தாா்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது: திருத்தணி தொகுதி ஏற்கனவே தேமுதிக வென்ாகும். இம்முறையும் திருத்தணி தொகுதியை பெற்று வென்றெடுப்போம். நாங்கள் எந்த கட்சியில் இடம் பெற்றிருந்தாலும் அந்த கட்சி அமோக வெற்றி பெறும்.

தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருத்தணியில் ரத யாத்திரையுடன் வேல் யாத்திரையே நடத்தி உள்ளோம். முருகன் அருளால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரம் 16 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. 2026-இல் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று திருத்தணியில் மேற்கண்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றாா்.

தொடா்ந்து பொதட்டூா்பேட்டை, ஆா்.கே.பேட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே பேசினாா்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா். திருவள்ளூா் அடுத்த களா... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க