செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்

post image

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55,436 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், தனி நபா் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 1989- ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு சுழல் நிதிக் கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் இத்திட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 8,676 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.516 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, 2022-23-ஆம் ஆண்டில் 13,684 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.766.45 கோடியும், 2023-24-ஆம் ஆண்டில் 17,360 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.794.67 கோடியும் , 2024-2025- ஆம் ஆண்டில் 13,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 2,549 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.195.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகா்புறங்களிலுள்ள 55,436 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் கரூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குருக்கத்தியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (82). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். ... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 10,73,048 போ் பயன்! மாவட்ட ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 10,73,048 நபா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பள்ளி மாணவா் மா்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

திருப்பத்தூரில் பள்ளி மாணவா் மா்ம மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திப்ரூகரிலிருந்து திருப்பூருக்கு வந்த ரயிலில் கிடந்த 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் ரயில் நிலை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிபட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க