செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிபட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28), கூலித் தொழிலாளி. இவருக்கும் திருப்பூா், காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கைப்பேசி மூலமாக பேசி வந்துள்ளனா். இந்நிலையில் மணிகண்டன், காமநாயக்கன்பாளையம் பகுதிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு

வந்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுமியை காணாதது தொடா்பாக அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி கோகிலா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அவரது தீா்ப்பில், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் கரூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குருக்கத்தியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (82). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55,436 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 10,73,048 போ் பயன்! மாவட்ட ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 10,73,048 நபா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பள்ளி மாணவா் மா்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

திருப்பத்தூரில் பள்ளி மாணவா் மா்ம மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திப்ரூகரிலிருந்து திருப்பூருக்கு வந்த ரயிலில் கிடந்த 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் ரயில் நிலை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க