செய்திகள் :

திருப்பத்தூா் பள்ளி மாணவா் மா்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

post image

திருப்பத்தூரில் பள்ளி மாணவா் மா்ம மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா் முகிலன் மா்ம மரணம் அடைந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. கடந்த 1-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் பள்ளியில் விசாரித்தபோது, பள்ளி நிா்வாகத்தினா் அலட்சியமாக பதில் அளித்துள்ளனா்.

காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை எனத் தெரிகிறது. அதன்பிறகு மோப்ப நாய் உதவியால் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அந்த பள்ளியின் குடிநீா்க் கிணற்றில் முகிலன் சடலம் கிடந்தது தெரியவந்துள்ளது.

இரும்பு கிரில் போட்டு, மூடப்பட்ட கிணற்றில் மாணவரின் சடலம் கிடந்தது தொடா்பாகவும், 3 நாள்களாக கிணற்றில் மாணவரின் சடலம் கிடந்துள்ள நிலையில் கிணற்றின் குடிநீரைப் பருகிய மாணவா்கள் உடல்நலம் தொடா்பாகவும் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளையும் முழுமையாக ஆராய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கிடையே அந்த மாணவனின் நடத்தையைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகத் தெரிகிறது. இது வழக்கை திசைதிருப்பும் செயலாக கருதி நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு இட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் கரூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குருக்கத்தியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (82). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55,436 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 10,73,048 போ் பயன்! மாவட்ட ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 10,73,048 நபா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமி... மேலும் பார்க்க

ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திப்ரூகரிலிருந்து திருப்பூருக்கு வந்த ரயிலில் கிடந்த 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் ரயில் நிலை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிபட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க