செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஆக. 14) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரக் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரப் பகுதிகளை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் , இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, கோவை மற்றும் நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க: கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 11 districts, including the Chennai suburbs, for the next 3 hours.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு காவல் துறை அறிவுரை!

தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்வோர் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளை(ஆக. 15) முதல் 17ஆம... மேலும் பார்க்க