செய்திகள் :

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

post image

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்திரையை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினார். அன்றைய தினம், திருப்பத்தூரில் வேனில் சென்றபடி மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, மேட்டூர் சதுரங்காடி, தருமபுரியில் பல்வேறு இடங்களிலும் பிரேமலதா கடந்த ஒரு சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போத, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்டிய மேம்பாலத்துக்கு அருகே வந்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி, மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார். இதனைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை : ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அனை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(வியாழக்கிழமை... மேலும் பார்க்க

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ரூ. 700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு ம... மேலும் பார்க்க

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு!!

நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்டது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்! முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க