செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது? - அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் கர்னல் சோஃபியா குரேஷி சொல்வதென்ன?

post image

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் கர்னல் சோஃபியா குரேஷி "ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவைப்பட்டது" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) நிகழ்ச்சியின் 17-வது சீசன் ஆகஸ்ட் 11-ம் தேதி மீண்டும் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இதில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஊடக அறிவிப்புகளில் முக்கிய பங்கு வகித்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சோனி டிவி வெளியிட்ட ப்ரோமோவில் தொகுப்பாளர் அமிதாப் பச்சன், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் ப்ரேர்ணா தியோஸ்தலீ ஆகியோரை நிகழ்ச்சியில் வரவேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசப்பட்டிருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் என்பது, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 காலை இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையாகும்.

Colonel Sophia Qureshi about Operation Sindoor

ஆபரேஷன் சிந்தூர் ஏன் இந்தியா நடத்தப்பட வேண்டியிருந்தது என்பது குறித்து கர்னல் சோஃபியா குரேஷி விளக்கினார். அந்த ப்ரோமோவில் "பாகிஸ்தான் இதை தொடர்ந்து செய்து வருகிறது. எனவே பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது," என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 15 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த சிறப்பு எபிசோடில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அதிகாரிகள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் - தொழிலதிபர் மகள் சானியா சந்தோக் திருமணம் நிச்சயதார்த்தம்?

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது தந்தையை போல, கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள... மேலும் பார்க்க

``சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலை அடைந்தாலும், அவர் எளிமையின் சிகரம்'' - ரஜினிகாந்த் குறித்து சசிகலா

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதி... மேலும் பார்க்க

``காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' - CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை... மேலும் பார்க்க

Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பியாக இருக்கிறார். ஜெயாபச்சன் எப்போதும் சற்று கோபப்படக்கூடியவர். அதுவும் அருகில் புகைப்படம் எடுக்க யாராவது வ... மேலும் பார்க்க

நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் அபர்ணா லவகுமார். திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளிக்குத் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

WAR 2: நடிகை கியாரா அத்வானியின் பிகினி காட்சியை நீக்கிய தணிக்கை குழு

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'வார் 2', ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உ... மேலும் பார்க்க