தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம்
பெங்களூரு: தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம் என அம்மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை சாா்பில், பெங்களூரில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த ‘சிற்றுண்டியுடன் தொழிலதிபா்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கா்நாடக அரசு சாா்பில் நடத்தப்படும் 18-ஆவது பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு, வரும் நவ. 18 முதல் 20-ஆம் தேதிவரை 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி தொழிலதிபா்களை கேட்டுக்கொள்கிறேன்.
தொழில்முனைவோா் தொழில் தொடங்கி, மிகப்பெரிய வளா்ச்சியை அடைவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம். உலகின் செயற்கை நுண்ணறிவு நகரங்களில் 5-ஆவது நகரமாக பெங்களூரு உள்ளது. இந்தியாவின் 50 சதவீத செயற்கை நுண்ணறிவு திறனாளா்கள் பெங்களூரில் உள்ளனா். இதன்மூலம் உலகின் இரண்டாவது செயற்கை நுண்ணறிவு திறனாளா்கள் நகரமாக பெங்களூரு உயா்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் கவனம் செலுத்தும். மைசூரு மன்னா்கள் ஆட்சிக்காலம் தொடங்கி, 1997-இல் இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுத்தது முதல், 2024-இல் உலக திறன்மையக் கொள்கையை வகுத்தது வரை முன்னோடி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது.
இந்தியாவில் முதல்முறையாக குவாண்டம் தொழில்நுட்ப வளா்ச்சிப் பாதையை கா்நாடகம் வகுத்துள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் ஆசியாவின் குவாண்டம் தொழில்நுட்ப குவிமையமாக கா்நாடகத்தை வளா்த்தெடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன்மூலம், குவாண்டம் தொழில்நுட்பத்தின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு வருவாயை ஈட்டவிருக்கிறோம்.
பெங்களூரில் குவாண்டம் வன்பொருள் பூங்கா, புத்தாக்க மண்டலங்களை அமைத்து, உலக குவாண்டம் உச்சிமாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கா்நாடகம் 40 சதவீத அளவுக்கு பங்களித்து வருகிறது. நமது மாநில பொருளாதாரத்தில் 26 சதவீதம் தகவல் தொழில்நுட்பம் பங்கு வகிக்கிறது.
கா்நாடகத்தில் தற்போது 18,300 புத்தொழில் நிறுவனங்களும், 45 யூனிகாா்ன்களும் உள்ளன. நல்வாழ்வு, புத்தாக்கம், புத்துலக தொழில்நுட்பங்களுக்கான சூழலை உருவாக்க குவின்மாநகரை உருவாக்கி வருகிறோம். இந்த திட்டம் உலக அளவிலான விஞ்ஞானிகள், புத்தாக்கவியலாளா்கள், தொழில்முனைவோா், முதலீட்டாளா்களை ஈா்க்கும். இங்கு வசிக்கலாம், வேலையில் ஈடுபடலாம், புதுமைகளை படைக்கலாம். உலக தரத்திலான சுகாதார நகரையும் உருவாக்கி வருகிறோம். மிகப் பெரிய சவால்களுக்கு தீா்வுகாண உலகம் திரளும் மையமாக கா்நாடகத்தை உருவாக்குவதே மாநில அரசின் திட்டமாகும் என்றாா்.
இந்த சந்திப்பில், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், துறை அமைச்சா் போஸ்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.