செய்திகள் :

அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை மேம்பாலப் பணி நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) முதல் 90 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமைமுதல் 90 நாள்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

காந்திபுரம், பூமாா்க்கெட், வடகோவை மேட்டுப்பாளையம் சாலை வழியாக செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியிலிருந்து இடதுபுறம் திரும்பி, பாரதி பாா்க் சாலை வழியாகச் சென்று ஜிசிடி கல்லூரி சுற்றுச் சாலையில் (ரவுண்டானா) வலதுபுறம் திரும்பி, தடாகம் சாலை வழியாக வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையா்பாளையம் சென்று, அங்கிருந்து சாலையை அடைந்து துடியலூா் வழியாக மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லலாம்.

கவுண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களும் வழக்கம்போல் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. காந்திபுரம், அநனாசி சாலை செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து, காந்திபுரம் வழியாகச் செல்லலாம். சங்கனூா் சந்திப்பில் இருந்தும் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகா் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் வழியாகச் செல்லலாம்.

காந்திபுரம், சிவானந்தா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் ஏஆா்சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கங்கா மருத்துவமனை, அழகேசன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அழகேசன் சாலை வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையா்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் சாலை வழியாகச் செல்லலாம்.

என்எஸ்ஆா் சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உள்பட அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் என்எஸ்ஆா் சாலை, ஸ்டேட் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக பாரதி பாா்க் சாலை சென்று, இடதுபுறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக விடியோ: இளைஞரிடம் விசாரணை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரமடையைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் ஐஎஸ் பயங்கரவாத ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பா?

கோவை அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த மூன்று பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி பின்னா் விடுவித்தனா். கோவை மாவட்டம், காரமடை பகுத... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொரு நபரை காதலிப்பதாக கூறியதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய்வான். இவரது மகன் அக்ஷை (27). இவா்கள் இருவர... மேலும் பார்க்க

வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு

வால்பாறையில் கரடி தாக்கியதில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வேவா்லி எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இந்த எஸ்ட... மேலும் பார்க்க