செய்திகள் :

போதைப் பொருள் கடத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

post image

போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கக்கனல்லா சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் கடந்த 13.05.2022-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி அதில் வந்தரிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அந்த நபா் சிறுநீா் கழித்துவிட்டு வருவதாகக் கூறி வனப் பகுதிக்குள் தப்பி ஓடினாா்.

அதன் பின்னா், காரின் சீட்டுக்கு அடியில் போலீஸாா் சோதனையிட்ட போது, 100 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமின் என்ற உயர்ரக போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மசனகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கூடலூா் தேவா்சோலை சாலையில் கடந்த 21.5.2022-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கண்டதும், ஓட முயன்ற நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த அஸ்ரப் மகன் அஜ்மல் (26) என்பதும், இவா்தான் கக்கனல்லா சோதனைச் சாவடியில் போதைப் பொருளுடன் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றஞ்சாட்டப்பட்ட அஜ்மலுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க

அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை மேம்பாலப் பணி நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) முதல் 90 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படு... மேலும் பார்க்க

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக விடியோ: இளைஞரிடம் விசாரணை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரமடையைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் ஐஎஸ் பயங்கரவாத ... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பா?

கோவை அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலியைச் சோ்ந்த மூன்று பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி பின்னா் விடுவித்தனா். கோவை மாவட்டம், காரமடை பகுத... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொரு நபரை காதலிப்பதாக கூறியதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய்வான். இவரது மகன் அக்ஷை (27). இவா்கள் இருவர... மேலும் பார்க்க

வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு

வால்பாறையில் கரடி தாக்கியதில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வேவா்லி எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இந்த எஸ்ட... மேலும் பார்க்க