செய்திகள் :

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

post image

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் விளைவாக இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி ரஷியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “ரஷியா மீண்டும் தங்கள் நாட்டைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். ஆனாலும், அந்த நாடு சிறப்பாகச் செயல்பட மிகப்பெரிய ஆற்றல் வளத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனால், தற்போது ரஷ்ய பொருளாதாரம் சிறப்பாக இல்லை. இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷியா ஒரு மிகப்பெரிய நாடு. அங்கு 11 விதமான நேர அமைப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா... நிலத்தின் அடிப்படையில் பார்த்தால் ரஷியா மிகப்பெரிய நாடுதான்” எனத் தெரிவித்தார்.

Trump says India tariffs hit Russian economy hard: 'That was a big blow

இதையும் படிக்க : பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு கா... மேலும் பார்க்க

பலுச். விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுகள்: அமெரிக்கா அறிவிப்பு!

பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பல கொடூரத் தாக்குதல்களுக்குப் ப... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

வெலிங்டன்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி கூறியதாவது:பாலஸ்தீன... மேலும் பார்க்க

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

போகடா: கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா். தலைநகா் போகடாவில் தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்றப... மேலும் பார்க்க

நிலநடுக்க உயிரிழப்பு: துருக்கியில் இருவா் கைது

அங்காரா: துருக்கியின் பாலிகேசிரி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரை அதிகார... மேலும் பார்க்க