செய்திகள் :

தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

post image

தில்லி உயர் நீதிமன்றத்தில், புதியதாக மேலும் ஒரு நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, பதவியேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, விமல் குமார் யாதவ், இன்று (ஆக.12) பதவியேற்றுள்ளார். இதன்மூலம், அந்த உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தில்லி மாவட்டத்தின் ஓய்வு பெற்ற நீதித் துறை அதிகாரியான நீதிபதி விமல் குமார் யாதவ், பதவி உயர்வு செய்யப்பட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஹிந்தி மொழியில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி விமல் குமார் யாத்விற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் வரை பதவி வகிக்க அனுமதியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் அங்கு 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

It has been reported that another new judge has been appointed and sworn in at the Delhi High Court.

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி ம... மேலும் பார்க்க

6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 19,000 பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.பெண்க... மேலும் பார்க்க

மணிப்பூரில் 22 கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம், 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் பிஷ்னூப்பூர், சூராசந்திரப்பூர், சந்தேல், தௌபல், கி... மேலும் பார்க்க

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க