செய்திகள் :

கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!

post image

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிறுவனம், இலவசமாக டிக்கெட்டும் வழங்கியுள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியாகி வந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், தற்போது தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையையொட்டி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது.

ரஜினி, விஜய், அஜித் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள்களில், அவர்களின் ரசிகர்கள் போலி காரணங்களை சொல்லி அலுவலகத்துக்கு விடுப்பு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்தியாவில் பல கிளைகளைக் கொண்ட ‘யூனோ அக்வா கேர்’ என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுப்பு அளித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கிளைகளுக்கு அந்த நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், கூலி வெளியாகும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ’ரஜினிசம் 50 ஆண்டுகள்’ என்ற பதாகையின் கீழ், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நன்கொடை அளிப்பது, மக்களுக்கு இனிப்பு வழங்குவது போன்ற நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கை

இந்த நிறுவனத்தின் சுற்றறிக்கை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர்களின் நிறுவனங்களை டேக் செய்து விடுமுறை கோரி பதிவிட்டு வருகின்றனர்.

The company has granted employees a day off to celebrate the release of actor Rajinikanth's film Coolie and has also provided free tickets.

இதையும் படிக்க : இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க

என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா

வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட... மேலும் பார்க்க

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் மு... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒ... மேலும் பார்க்க