செய்திகள் :

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

post image

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாராத அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. செய்யறிவால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பல தொழில் துறைகள் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் ஏஐ வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் புற்றுநோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிவதில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் ஒருவரின் குரல் பதிவு, குரல் தொனி, அதன் தெளிவு ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கிறதா என்று ஏஐ கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

'ஃபிரன்டியர்ஸ் இன் டிஜிட்டல் ஹெல்த்' இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குரல் பதிவில் இருந்து குரல் மடிப்புகளில் அசாதாரணங்கள் அல்லது புண்களைக் கண்டறிவதற்கான ஏஐ மாதிரிகளை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்றும் குரல் ஒலியில் உள்ள மாற்றங்கள், அசாதாரணங்கள், குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஏனெனில் தற்போதைய புற்றுநோய் கண்டறிதல் முறைகளான எண்டோஸ்கோபி, பயாப்ஸிகள் ஆகியவை புற்றுநோயை அருகில் உள்ள திசுக்களுக்கு பரப்பிவிடும்.

'ஃப்ரிட்ஜ்2ஏஐ வாய்ஸ்' தரவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட 306 பேரின் 12,500-க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் குரல் பதிவில் இரைச்சல் விகிதம் மாறுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதாவது குரல் பதிவின் இரைச்சல் விகிதத்தின்அடிப்படையில் ஆரோக்கியமான குரல்வளை, புண்கள் அல்லது பிரச்னைகள் உள்ள குரல்வளை என வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

அதிலும் குறிப்பாக ஆண்களின் குரல்வளைகளில் உள்ள வித்தியாசங்கள் எளிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பெண்களின் குரல்வளைகளில் பிரச்னைகள் இருக்கிறதா என ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. எனினும் அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறினர்.

குரல் பதிவுகளில் ஏற்படும் மாற்றம் காலப்போக்கில் எவ்வாறு உருமாறுகின்றன என்பதைக் கண்காணிப்பதிலும் ஆரம்ப கட்டத்தில் ஆண்களில் குரல்வளை புற்றுநோயைக் கண்டறிவதிலும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து குரல் பதிவுகளில் ஏஐ-யைப் பயன்படுத்தி மேலும் ஆய்வு மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டுள்ளது.

Researchers have found that voice features in recordings could help detect early warning signs of cancer of the larynx (voice box)

இதையும் படிக்க |மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க

என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா

வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட... மேலும் பார்க்க

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் மு... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒ... மேலும் பார்க்க