செய்திகள் :

என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா

post image

வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.

தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்பது என தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கும் கோமதி பிரியா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணங்கள் செல்வதில் நாட்டம் கொண்டவராக உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக கோமதி பிரியா நடித்து வருகிறார். இதோடுமட்டுமின்றி மலையாளத்தில் மகாநதி என்ற தொடரிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இரு தொடர்களில் நாயகியாக நடித்து வருவதோடு மட்டுமின்றி, தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மறுஉருவாக்க நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

இதனால், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் என மூன்று மாநிலங்களுக்கும் படப்பிடிப்புக்காக தொடர்ந்து பறந்துகொண்டிருக்கும் நடிகையாக கோமதி பிரியா மாறியுள்ளார்.

எனினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணங்கள் செல்வதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். அந்தவகையில் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஜடாயு பாறை கோயிலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கோமதி பிரியாவின் பதிவு

ஆளரவமற்ற உச்சியில் இயற்கையை ரசிக்கும் வகையில் விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சில நேரங்களில் உங்களுக்குத் தேவையானவற்றை வாழ்க்கை கொடுக்காமல் இருக்கலாம். அதன் காரணம் அதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்பது அல்ல; கடவுளுக்குத் தெரியும் உங்களுக்குத் தகுதியானது எது என்று எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Vijay tv Sirakadikka aasai serial actress Gomathi priya viral post

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் மு... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒ... மேலும் பார்க்க

கூலி அலெலே போலேமா-க்கு என்ன அர்த்தம்?

கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிக்கு அனிருத் அர்த்தம் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளத... மேலும் பார்க்க