செய்திகள் :

திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

post image

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகும் அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்திய பிறகும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சோதனைச் சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் ஃபாஸ்டேக் முறையில் கட்டண வசூலிப்பு நடைமுறைக்கு வரவிருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலையில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் எனவும் ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் புதிதாகப் பெற ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் மையங்கள் அமைக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதனைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirumala Tirupati Devasthanam announced that FASTags will be mandatory for vehicles travelling on the Tirupati hill route from August 15th.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது. பங்குச்சந்தையி... மேலும் பார்க்க

மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துவாரம் வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ... மேலும் பார்க்க