செய்திகள் :

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்

post image

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தின் 3 ஆம் கட்டமாக இன்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை பேரவைத் தொகுதிகளில் சாலை வலம் மேற்கொண்டார்.

இதில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

''தமிழகத்தை திமுக ஆண்டுவந்தாலும், கோவை, திருப்பூரில் அதிமுகதான் ஆளும் கட்சியாக உள்ளது. திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரி அத்திகடவு அவினாசி திட்டம் ஆகியவை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது திமுகவின் யுக்திகளுள் ஒன்று. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நாளுக்கு நாள், கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததுக்கு துணை குடியரசுத் தலைவர் கைகளில் விருது வாங்கினேன். தற்போது, போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 67% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, கடைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மக்கள், இன்றைய கிருஷ்ணகிரி- ஓசூர் தொழில் துறையின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இயக்கம் அதிமுகதான் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி, தங்களை ஏமாற்றிய திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க இத்தொகுதிகளின் மக்கள் தயாராக இல்லை.

மீண்டும் இப்பகுதிகள் ஏற்றம் பெற, புதிய உச்சங்களைத் தொட, 2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு நிச்சயம் வழிவகை செய்யும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | விஜயகாந்தை அரசியல் குரு என விஜய் அறிவித்தால்...! - பிரேமலதா பேட்டி

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the DMK government for deceiving the people through impossible promises.

“அடிமைத்தனத்தைப் பற்றி பேசலாமா?” -இபிஎஸ் மீது முதல்வர் விமர்சனம்!

சென்னை: “அடிமைத்தனத்தைப் பற்றி பேசலாமா?” என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற... மேலும் பார்க்க

விஜயகாந்தை அரசியல் குரு என விஜய் அறிவித்தால்...! - பிரேமலதா பேட்டி

தமிழக அரசின் தாயுமானவர் திட்டம் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு மற்றும... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், செப்டம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க